திமுக தலைமையில் நடக்க இருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!

Default Image

கோயம்புத்தூரில் சொத்துவரி அதிகமாக்கபட்டதன் காரணமாக,  கோவை மாநகராட்சியை எதிர்த்து திமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தன.

ஆனால், இந்த திமுக தலைமையில் நடத்த இருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தற்போது  உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

திமுக கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக செய்தி அறிந்ததும் உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக பொதுநலவழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில், முழு கடையடைப்பு கோயம்புத்தூரில் நடைபெற்றால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டுதான் திமுக தலைமையில் நடத்த இருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி போராடுவது சட்ட விரோதம் எனவும், உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் ஷேசசாயி ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்