உயர் நீதிமன்றம் பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவு சார்பதிவாளர் மீது நடவடிக்கை!

Published by
Venu

சென்னை உயர் நீதிமன்றம் திருமண வயதை எட்டாத மாணவருக்கு போலி சான்று மூலம் பதிவு திருமணம் செய்து வைத்த பூந்தமல்லி சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க, பதிவுத்துறை ஐ.ஜி.க்கு  உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் மகாலட்சுமி. சென்னையை சேர்ந்த மைக்கேல் விக்னேஷ் என்பவரை பதிவுத் திருமணம் செய்துக் கொண்டார். இதனை அடுத்து, மைக்கேல் விக்னேஷிடம் சட்டவிரோத காவலில் தனது மகள் உள்ளதாகவும், அவரை மீட்டு தரக் கோரியும் கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண வயதை அடையாத மைக்கேல் விக்னேஷ், போலிச் சான்றிதழ்களை தயாரித்து பதிவுத்திருமணம் செய்துக்கொண்டதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டு, அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள், போலிச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, ஆவணங்களை சரிபார்க்காமல் பதிவுத் திருமணம் செய்து வைத்த பூந்தமல்லி சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பதிவுத்துறை ஐ.ஜி.க்கு அவர்கள் உத்தரவிட்டார்.

மேலும், போலிச் சான்றிதழ்களை தயாரிக்க உதவி புரிந்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கு தொடர்பான ஆவணங்களை பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago