கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல மாநிலங்களில் மக்கள் கூடும் ஜிம் , திரையரங்கம் , போன்ற இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.மேலும் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து முக கவசம், கையை சுத்தப்படுத்தும் சானிடைசர்கள் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 30-ம் தேதி வரை அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் முகக் கவசம் , சானிடைசர்களை பதுக்குவதோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பதோ சட்டப்படி குற்றமாகும். மீறினால் 7 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் முககவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பலர் புகார் எழுந்த நிலையில் அதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நூலகர் ராஜேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முககவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.? என்ற கேள்வியை எழுப்பியது.மேலும் இது குறித்து தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…