தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.
தமிழகம்:
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்றது.இதில் பதிவான வாக்கு சதவீதம் 71.79% ஆகும் .
இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் தகுதிபெற்றிருந்தனர்.
கேரளா:
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்றது.இதில் பதிவான வாக்கு சதவீதம் 70.04% ஆகும். கேரளாவில் மொத்தம் 2.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற வாக்கு சதவீதம் 78.13% ஆகும்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. புதன்கிழமை காலை 7 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம்:
அசாம் மாநிலத்தில் மொத்தமாக 126 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக கடந்த 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
அதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள 40 தொகுதிகளுக்கு மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.அஸ்ஸாமில் (3வது மற்றும் இறுதி கட்டம்) காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற வாக்கு சதவீதம் 82.29% ஆகும்.
மேற்கு வங்கம்:
மேற்குவங்கத்தில் மொத்தமாக 294 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 31 தொகுதிகளுக்கான 3வது கட்டம் நடைபெற்றது.இதில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற வாக்கு சதவீதம் 77.68% ஆகும்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…