இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவுவது பிளவை ஏற்படுத்தும் – முதல்வருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்!

Default Image

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் நிலவி வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக முதல்வருக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

அதாவது, இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும். எனவே இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமே தமிழ்நாடு அரசு உதவ முன்வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்