நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிதைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் இறந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு நேற்று சென்ற எம்ஐ-17 என்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து முழுமையாக எரிந்தது.
இதனையடுத்து,சம்பவ இடத்தில் 9 பேரின் உடல்கள் எரிந்த நிலையிலும்,4 பேர் சிதைந்த நிலையில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.ஆனால்,அதன்பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நான்கு பேரில் மூவர் உயிரிழந்தனர்.அதன்படி,இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும்,உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில்,விபத்தில் சிதைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் இறந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்களின் எலும்புகளை வைத்து ஆண் மற்றும் பெண் என உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக எலும்பு மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…