குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை.
இன்று காலை 11:47 க்கு சூலூரில் இருந்து புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் பகல் 12.20 மணிக்கு விபத்துக்குள்ளானது. தரையிறங்க வேண்டிய வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டருக்கும் முன்புதான் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. தரையிறங்கி 5 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விழுந்த உடனே அருகில் செல்ல முடியாத அளவுக்கு தீப்பற்றி விமானம் எரிந்தது. விமானம் பெட்ரோல் காரணமாக தொடர்ந்து தீ எரிந்து கொண்டே உள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் 10 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். பிபின் ராவத் நிலைமை என்ன என்பது தான் தற்பபோதைய பெரும் கேள்வியாக உள்ளது.
இதுவரை இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்கு செல்கிறார். ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டவர்கள் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…