டவ் – தே புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த டவ்-தே புயல் வருகின்ற 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கவுள்ளது.
இந்நிலையில் டவ் – தே புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் டவ்-தே புயல் கர்நாடகா கரையோரத்தில் இருந்து 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக 150 – 160 கீ.மீ வேகத்தில் கற்றுவீசக்கூடும் என்றும், புயலின் தாக்கம் தமிழகம், மகாராஷ்ரம், கேரளா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…