பலத்த மழை – சேலத்தில் வீடுகளை சூழ்ந்துகொண்ட தண்ணீரால் மக்கள் அவதி!

Default Image

சேலத்தில் வீடுகளை சூழ்ந்துகொண்ட தண்ணீரால் மக்கள் அவதி.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக சேலம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து,விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது, அம்மா உணவகத்திற்கு ஊழியர்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலை ஓரங்களிலும் வளாகத்திற்குள்ளும் நீர் சூழ்ந்து கொண்டுள்ளது.

இதனிடையே சேலத்தில் நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டத்தையடுத்து சுமார் மூன்று மணி நேரங்கள் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே தாழ்வான இடங்களில் உள்ள மக்களின் வீடுகளை சுற்றி தண்ணீர் அதிகம் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்