புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை..!

Published by
பால முருகன்

புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்தது, இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்தது, கடந்த சில நாட்களாகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்த நிலையில் நேற்று மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இந்நிலையில் அதைப்போன்று நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினதின் சுற்று வட்டார பகுதிகளான மீமிசல், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, அப்போது பலத்த காற்றும் வீசி திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மேலும் இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வந்தது. கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழையால் பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

7 hours ago

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

8 hours ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

9 hours ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

9 hours ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

10 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

11 hours ago