தமிழகத்தில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,தமிழகத்தில் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நாளை வரை செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025