கனமழை எச்சரிக்கை: நீலகிரி மக்களுக்கு உதவி எண் அறிவிப்பு.!

Published by
கெளதம்

நீலகிரி : மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்க்கண்ட் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக, காவல்துறை சார்பாக பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனர் என்று மாவட்ட காவல்துறை சார்பாக கட்டுப்பாட்டு மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசர உதவிக்கு கீழ்காணும் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

  • மாவட்ட ஆட்சியர் அலுவலகம் –1077
  • காவல்துறை கட்டுப்பாட்டு அறை – 0423 2444111
  • தனிப்பிரிவு அலுவலகம் – 9498101260, 9789800100

நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை :

வயநாட்டைப் போல நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்கிற செய்தி கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இன்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உபகரணங்களை கலெக்டர் லக்ஷ்மி பவ்யா பார்வையிட்டார்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு,” வயநாட்டைப் போல நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள புவியியல் துறை குழு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளர்.

Published by
கெளதம்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

2 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

2 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

2 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

3 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

3 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

3 hours ago