13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Default Image

13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்களுக்கு மழை:-

அந்த வகையில், அரியலூர், தர்மபுரி, திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தஞ்சாவூர், திருவாரூர் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை:-

மேலும், சென்னை அதன் சுற்று வட்டார பகுதியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேகம் மூட்டத்துடன் காணப்படும், ஆனால் நகரின் ஒரு பகுதியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்