#BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிக கனமழை…!

Default Image

தமிழகத்தில் நவம்பர் 4 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மிக கனமழை வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூரில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 3-ஆம் தேதி முதல் 4-ம் தேதி வரை குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் எனவும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும். இன்று முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை அரபிக்கடலில் தென்கிழக்குப் பகுதி, கேரள கடலோரம், லட்சத்தீவில் பலத்த சூறாவளி வீசும்.

நவம்பர் 4-ம் தேதி லட்சத் தீவு பகுதியில் பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி வீசுவதால் மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதி, அதை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நீடிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்