தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஏற்கனவே 8 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வரும் நிலையில், மிகக் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு மற்றும் போரூர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது காரணமாக மாநகர பேருந்துகள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை எம்ஆர்சி நகரில் கடந்த 7 மணி நேரத்தில் 18 செமீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…