கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில அரசுகள் வேறு எந்த நிறுவனத்துடனும்,பொதுவெளியிலும் வெளியிட மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது.அதில்,
இந்நிலையில்,கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்த தகவல்களை பொதுத்தளத்தில் வெளியிடக்கூடாது என்று மத்திய அரசு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியானதாக இருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
மேலும்,இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
“தடுப்பூசி எண்ணிக்கையை பொதுத்தளத்தில் தெரிவிக்க கூடாது என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை கூறியுள்ளது.ஆனால்,தடுப்பூசி கையிருப்பு குறித்து தெரிவிக்காமல் இருந்தால் மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியாமல்,தடுப்பூசிக்காக மக்கள் வரிசையில் காத்திருந்து ஏமாறும் நிலை ஏற்படும்.எனவே,தடுப்பூசி குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்வது தான் சிறந்தது.
மேலும்,தமிழகத்திற்கு இதுவரை 1,01,63,000 தடுப்பூசி டோஸ்கள் வந்துள்ளன.இதனால், 97,62,957 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இருப்பினும்,தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை” என்று கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…