புதுச்சேரியில் கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்.!

Default Image

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, புதுச்சேரியில்  உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு அமைத்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ்  கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

கொரோனா வார்டில் செல்லும்போது பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து சென்றுள்ளார். அப்போது, கொரோனா முகாமில் தங்கியிருந்த நோயாளிகள் முகாமில் உள்ள கழிவறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை என புகார் தெரிவித்தனர்.

உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் கழிவறையை சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் கிருமிநாசினி கொண்டு கழிவறையை சுத்தப்படுத்தினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்