புதிய வகை கொரோனா.. முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!

Published by
மணிகண்டன்

சென்னை: சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா KP.2 பற்றி மக்கள் பயப்பட வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ள்ளது.

2020ஆம் ஆண்டு உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பேரலை பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தியது. இதற்கான தடுப்பூசிகளையும் பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தற்போதும், அவ்வப்போது புதுபுது கொரோனா வைரஸ் பல்வேறு பரிமாணங்களில் உருவாகி கொண்டு தான் இருக்கிறது.

கடந்த சில வாரங்களாக இந்த கொரோனா புதிய வகை தொற்றால் சிங்கப்பூர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தை போல நாள்தோறும் சுமார் 2000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. KP.2 என இந்த தொற்றுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று இந்தியவிலும் பரவியுள்ளது. இந்தியா முழுக்க சுமார் 100க்கும் அதிகமானோருக்கு இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் செல்வவிநாயகம் குறிப்பிடுகையில், இந்தியாவில் KP.2 கொரோனா பாதிப்பால் மக்கள் மத்தியில் எவ்வித பயமோ, பதற்றமோ தேவையில்லை. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 100 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.  இது ஓமிக்ரான் வகை வைரஸின் ஒரு கிளை, KP.2 இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

KP.2 மாறுபாடு KP.1.1 மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது மிக வேகமாக பரவும் நிலை கொண்டுள்ளது. இருந்தாலும், தற்போது அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. KP.2 படிப்படியாக உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் பரவும் தன்மை கொண்டது. பொதுவான அறிகுறிகளான தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், இருமல், தலைவலி, உடல் வலி, காய்ச்சல், நெரிசல், சோர்வு மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல வரம்புகளை உள்ளடக்கியது. இந்த KP.2 கொரோனா மாறுபாடு ஆபத்தானது அல்ல என்றும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த புதிய வகை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளவும், முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன அரசு திட்டங்கள்? -அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…

52 minutes ago

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…

2 hours ago

Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

2 hours ago

பயணிகளின் கவனத்திற்கு!! பராமரிப்பு பணி… இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…

2 hours ago

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் அறிவிப்பு.! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…

3 hours ago

சிதம்பரத்தில் பரபரப்பு.! திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு.!

கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…

3 hours ago