கொரோனாவில் இருந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தேறி வந்த நிலையில் திடீர் பின்னடைவுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node