புதுச்சேரியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்

Default Image

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்தியாவில் கொரோனாவால்  12,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.420 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்துள்ளார்.புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.தற்போது அவர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.இதுவரை புதுச்சேரியில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh
S-400 air defense system