தலைக்கேறிய போதை…! தண்டவாளத்தில் ரயில் ஏறி இறங்கிய ரயில்..! இருவர் உயிரிழப்பு..!

Default Image

தூத்துக்குடியில்மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழப்பு. 

தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெபசிங், திருவிக நகரை சேர்ந்த மாரிமுத்து, பசும்பொன் நகரை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 3 பேரும் மதுபோதையில் 3-வது மைல் மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டவாளத்தில் உறங்கியுள்ளனர்.  அப்போது அந்த வழியே வந்த ரயில் அவர்கள் மீது ஏறி இறங்கியதில், இருவர் உயிரிழந்த நிலையில், ஜெபசிங் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்