தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மே 14 ஆம் தேதியன்று ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையில் ஒன்றான ரமலான் பண்டிகையின் நோன்பு கடந்த ஏப்ரல் 14-ம் தேதியிலிருந்து தொடங்கியது.சூரிய உதயத்துக்கு முன் உணவு உண்டு,இடையில் தண்ணீர்,உணவு இல்லாமல் மாலை சூரியன் மறையும் வரை நோன்பு இருக்கும் நிகழ்வை ரமலான் மாதத்தின் 30 நாட்களும் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பர்.
இந்நிலையில்,ரமலான் பண்டிகைக்கான பிறை நேற்று தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் வானில் பிறை தென்படாத காரணத்தினால்,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மே 14 ஆம் தேதியன்று ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,”சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிறை தெரியாத காரணத்தினால்,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரமலான் திருநாள் பண்டிகையானது வருகின்ற மே 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்படும்”,என்று கூறியிருந்தார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…