நம்மை காக்கும் காவல் தெய்வம் ஒன்று பணியின் போது மாரடைப்பால் மரணம்…

Default Image
இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்திலிருந்து விடுபட  போராடி வரும் நிலையில் தற்போது டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை தனிமைப்படுத்த அரசு தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில் இவர்களை கண்டு தனிமைப்படுத்த காவல்துறை காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு தீயாக வேலை செய்து வருகிறது.  இந்நிலையில்  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் காவல் நிலையத்தில்  தலைமை காவலராக பணியாற்றி வருபவர் திரு.குப்பன் அவர்கள். அவர் காவல் நிலையத்தில் இரவுப்பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்