நெல் குவிண்டாலுக்கு ரூ,1,888 உயர்த்தி-அரசு உத்தரவு

Published by
kavitha

நடப்பாண்டு நெல் கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக முதலவர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவுபடி தமிழகத்தில் கடந்த கொள்முதல் பருவமான 2019-2020ம் ஆண்டுக்கான  2 ஆயிரத்து 135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதில் சுமார் 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதன் மூலமாக விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையாக ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 130 கோடி ஆனது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலமாக சுமார் 5 லட்சத்து 85 ஆயிரத்து 241 விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். இக்கொள்முதல் அளவானது தமிழக வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும்.

அக்.,1ந்தேதி முதல் தொடங்கிய 2020-2021-ம் ஆண்டு கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1,888 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1,868 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டு உள்ளது.

இதனுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.70வும் சாதாரண ரகத்திற்கு ரூ.50வும் வழங்கி ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.1,958 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1,918 வழங்கப்படும்.

கொள்முதல் விலையானது  உயர்த்தப்பட்டு உள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள மின்னணு எந்திரங்களில் தேவையான மாற்றங்களும் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அக்.,1ந்தேதி முதல் கொள்முதல் தொடங்கப்பட்டு விட்டது.

அக்.,2-ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே, நேற்று முதல் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளின் நெல்லினை, உயர்த்தப்பட்ட விலையிலேயே கொள்முதல் நடைபெற்று வருகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லினை உடனடியாக கொள்முதல் செய்யும் வகையில் இன்று (ஞாயிற்றுகிழமை) அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி இதுவரை, 591 நேரடி கொள்முதல் நிலையங்களை அரசால் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது, சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லானது அறுவடை எந்திரம் மூலம் விவசாயிகளால் ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இவ்வாறு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல்லினை பாதுகாப்பாக வைப்பதற்கு பாலித்தீன் தார்பாய்கள் வழங்கப்பட்டும் உள்ளது.ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய  முடியும். அதனால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அதிக அளவில் நிலுவையில் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே விவசாயிகளிடமிருந்து வருகின்ற கோரிக்கைகளின் அடிப்படையில் தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனால் விவசாயிகள் அறுவடை செய்த தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உயர்த்தப்பட்ட அதிக விலைக்கே விற்பனை செய்து பயனடையலாம் என்று தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Published by
kavitha

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

9 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

17 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago