மற்றவர்கள் மாதிரி இல்லை , தம்பி விஜய் மீது பேரன்பு உண்டு என்று சீமான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் கிடைக்கும் அடியில் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்றும் எம்ஜிஆர், பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் அதனால் தான் அவரை மதிக்கிறோம். மற்றபடி என்ன நல்லாட்சி செய்தார்? என கேள்வி எழுப்பினார்.
சீமான் இவ்வாறு பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.மேலும் சீமானுக்கு எதிராக சமூக வலைத்தளமான ட்விட்டரில் #டுபாக்கூர்_சீமான் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.இதனைத்தொடர்ந்து சீமானுக்கு ஆதரவாக #மக்கள்_தலைவர்_சீமான் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது.
இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், விஜய் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது?என்று கேள்வி எழுப்பினார்.மேலும் தொடக்கத்தில் இருந்தே தம்பியை தற்காத்து நின்ற அண்ணன் என்று தெரியும்.மற்றவர்கள் மாதிரி இல்லை , தம்பி விஜய் மீது பேரன்பு உண்டு.குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காவது தம்பி விஜய் குரல் கொடுக்கட்டும் .மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை…