திராவிட சித்தாந்த கருத்து : ஆளுநர் ரவி சிறைக்கு செல்வார்.. ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு.!

Published by
மணிகண்டன்

சென்னை : நாட்டில் பிரிவினைவாதத்தை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என ஆளுநர் ரவி கூறியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நேற்று சென்னை ஐஐடியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை ஐஐடி மற்றும் ஆளுநர் மாளிகை இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் நிகழ்ந்த தேசப் பிரிவினை மற்றும் அப்போது நேர்ந்த கொடூரங்கள் பற்றி நினைவுகூரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “வரலாற்று அடிப்படையில் கடந்த காலத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் பிரிவினையால் பல்வேறு கொடூரங்கள் வன்முறைகள் நடந்தன. பிரிவினைவாதத்தால் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்ததை மறந்து விட்டோம்.

நமது நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து 30 ஆயிரம் கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. கச்சத்தீவு உரிமையை விட்டுக் கொடுத்து விட்டோம். 65 ஆண்டுகளாக பாரதத்தை ஆண்டவர்கள் நமது சித்தாந்தத்தை உடைக்க பார்த்தனர். நாம் அனைவரும் ஒன்று என்பதே பாரதத்தின் சித்தாந்தம்.

அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் முயற்சியை சிலர் செய்து வருகின்றனர். 1947இல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினைவாதத்தைச் சிலர் ஏற்படுத்துகிறார்கள். பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என்று ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய நிகழ்வில் உரையாற்றினார்.

திராவிட சித்தாந்தம் பிரிவினைவாதத்தை ஆதரித்தது என்ற கருத்துக்கு திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாடு முழுவதும் தேசிய கீதம் பாடப்படுகிறது. தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் வருகிறது. திராவிடம் பிடிக்கவில்லை என்றால் அதனை நீக்கிவிட்டு தேசிய கீதத்தை ஆளுநர் பாடுவாரா? அப்படி அவர் பாடினால் தேசிய கீதத்தை அவமதித்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறைக்கு செல்வார்.” என்று ஆளுநர் கூறிய திராவிட சித்தாந்த கருத்து குறித்து ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ”ஷைன் டாம் சாக்கோ” கைது.!

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…

1 minute ago

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

2 hours ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

2 hours ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

2 hours ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

3 hours ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

3 hours ago