காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஜோதிமணி ட்வீட்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘எமது தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் பணியாற்றியுள்ள, 15 வருட கால காலத்தில் தனது விழுமியங்கள், கொள்கை மற்றும் நேர்மையில் அவர் ஒருதுளியேனும், சமரசம் செய்து கொண்ட ஒரு நொடியை கூட நான் பார்த்ததில்லை. பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் அவர்.
அவரைப் போலவே எங்களையும் தயார் செய்தார்.அவர் எங்கள் தலைவர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். அமைதி, ஒருமைப்பாடு மற்றும் வளம் என இந்த நாட்டை அதன் அசலான சிறப்புகளை நோக்கி இட்டுச் செல்ல கூடிய மகத்தான தலைவர் அவர் மட்டுமே. தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…