பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் அவர் – ஜோதிமணி எம்.பி

Default Image

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஜோதிமணி ட்வீட். 

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘எமது தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் பணியாற்றியுள்ள, 15 வருட கால காலத்தில் தனது விழுமியங்கள், கொள்கை மற்றும் நேர்மையில் அவர் ஒருதுளியேனும், சமரசம் செய்து கொண்ட ஒரு நொடியை கூட நான் பார்த்ததில்லை. பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் அவர்.

அவரைப் போலவே எங்களையும் தயார் செய்தார்.அவர் எங்கள் தலைவர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். அமைதி, ஒருமைப்பாடு மற்றும் வளம் என இந்த நாட்டை அதன் அசலான சிறப்புகளை நோக்கி இட்டுச் செல்ல கூடிய மகத்தான தலைவர் அவர் மட்டுமே. தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்