திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இவர் ஒருவரே போதும்..! – டிடிவி தினகரன்

Published by
லீனா

திமுக ஆட்சியை கொண்டு முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருவரே போதும் என டிடிவி தினகரன் பேட்டி. 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தர்மபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடி இருந்தால் நிச்சயம் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.

ttv13

ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாத காரணத்தால் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. அம்மாவின் சின்னமான இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில், துரோகிகள் கையில் உள்ளது. அதனால் அந்த கட்சிக்கும் இடைத்தேர்தலில் எங்களின் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவுக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பழனிசாமி செய்த தவறான செயலால், கடந்த தேர்தலில் திமுகவை மக்கள் ஆட்சியில் அமர்த்தி விட்டனர்.

வரும் மக்களை தேர்தலில் திமுகவை வீழ்த்த விரும்பும் கட்சிகளோடு இணைந்து ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அந்த அணியில் இணைந்து நாங்களும் பணியாற்ற முன்வருவோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு ஏ டி எம் மையங்களில் கொள்ளை நடந்த சம்பவம் காட்டுகிறது.

தமிழகத்தில் மலிந்து கிடக்கும் போதைப் பொருளால் மாணவ செல்வங்கள் சீரழிந்து வருகின்றனர். இதனால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் வேதனையில் தவிக்கின்றனர். திமுக ஆட்சியை கொண்டு முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருவரே போதும் என தெரிவித்துள்ளார்.

பேனா சின்னத்தை கருணாநிதி நினைவிடத்தில் சொந்த நிதியில் திமுக வைக்கலாம். கடல் இல்லாத இடத்தில் திமுக அரசு நிறுவினால் யாருக்கும் எந்த ஆட்சபமும் இல்லை. திமுகவிற்கு  ரூ.81 கோடி என்பது பெரிய பணமல்ல. இதனை தங்கள் சொந்த நிதியில் இருந்து கட்டலாம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

30 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

34 mins ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

35 mins ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

1 hour ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

2 hours ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

2 hours ago