விவசாய நிலத்தை சுற்றி வந்தபோது விபரீதம்.! மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி.!

Default Image

தர்மபுரியில் விவசாயநிலத்தில் வைக்கப்பட்டு இருந்த மின் வேலி மின்சாரம் தாக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

காட்டுயானைகள் அண்மைக்காலமாக கிராமங்களுக்குள் உள்புகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில சமயம் அந்த காட்டுயானைகள் விவசாய நிலத்தை சேதப்படுத்தி விடுகின்றன.

தொடர் உயிரிழப்புகள் : இதனால் சிலர் சட்டவிரோதமாக வயல்வெளிகளில் மின்வேலி அமைத்து விடுகின்றனர். அதில் வனவிலங்குகள் சிக்கி பல்வேறு சமயங்களில் உயிரிழந்து விடுகின்றன.

5 காட்டுயானைகள் : அப்படித்தான், தருமபுரி மாவட்டம் மாண்டஹள்ளி அருகே விவசாய நிலையத்தில் வைத்து இருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் இரண்டு குட்டிகள் உள்ளிட்ட ஐந்து காட்டு யானைகள் விவசாய நிலத்தினை சுற்றிவந்துள்ளன.

எமனாக மாறிய மின்வேலி : அப்போது அங்கு சட்டவிரோதமாக பாதுகாப்புக்காக வைக்கப்ட்டு இருந்த மின் வேலியில் குட்டிகளை தவிர மற்ற யானைகள் இறந்துவிட்டன. தாய் யானை இறந்தது கூட தெரியாமல் இரண்டு குட்டி யானைகளும் சடலத்தை சுற்றி சுற்றி வருகின்றன இது காண்பவரை கலங்கடித்து உள்ளது.

சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்ததாக கூறி சக்தி மற்றும் முருகேசன் ஆகியரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்