அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்…! அதற்கு உதாரணம் இவர்தான்..! – பிரேமலதா

Published by
லீனா

நேற்று முன்தினம் தேமுதிக கட்சியின் 18வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் விஜயாகநாத் அவர்கள் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் விஜயகாந்தை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரேமலதாவுக்கு  அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா அவர்கள், 2011 தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் செய்த துரோகங்களால்தான் விஜயகாந்த்துக்கு சறுக்கல் ஏற்பட்டது, அதால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் நலமும் பாதிக்கப்பட்டது .

மூன்று மாநில தேர்தல் முடிவுகள் – எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொதுச்செயலாளராக நான் தேர்வானது திடீரென எடுத்த முடிவல்ல. கேப்டன் மனைவியாக என் வாழ்க்கையை தொடங்கினேன்; தற்போது பொதுச்செயலாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பை எனக்கு கேப்டன் கொடுத்துள்ளார் தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லை, அன்னையாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

விஜயகாந்தின் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும். அரசியலில் இருப்பதே சவால் தான். குறிப்பாக பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்.  அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா தான்.

ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை , அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக்கு அரசியல் ரோல் மாடல். அவருடைய தைரியமும், தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

38 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

44 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago