7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திராவிட மாடல் அரசின் சமூக நீதி பயணத்தின் ஹாட்ரிக் வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியின் போது, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் எனத் தீர்ப்பளித்தனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திராவிட மாடல் அரசின் சமூக நீதி பயணத்தின் ஹாட்ரிக் வெற்றி. மருத்துவ படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒபிசிக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்தது முதல் வெற்றி.
மருத்துவ மேற்படிப்பில் ஊரக அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசுக்கு 2-ஆவது வெற்றி. சமூகநீதி பயணத்தில் இன்னும் பல காலங்களை உறுதியுடன் எதிர்கொள்வதற்கான ஊக்கத்தை, உத்வேகத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…