4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை., கருப்பு கொடிகளை கட்டி கிராம மக்கள் போராட்டம்!

Published by
Castro Murugan

கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என விளாத்திகுளம் அருகே வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டம்.

கோவில்பட்டி, விளாத்திகுளம் அருகே கமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட துரைராஜ் நகர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக குடிநீர் வசதி செய்து தரவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று குடிநீர் எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மனு அளித்தும் குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருவதாகவும், சாலை வசதி, மின்விளக்கு என அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என மக்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கி சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த விளாத்திகுளம் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கருப்பு கொடிகளை அகற்ற வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை தொடர்பு கொண்டும் பேசினார். அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன், உரிய அனுமதி பெற்று அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கிராம மக்கள் தங்கள்து போராட்டத்தை ஒத்திவைத்தனர். இதனிடையே தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த கூடாது என்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை செயல்படுத்தலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அடிப்படை வசதி இல்லாத சில பகுதிகளில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும்படி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

5 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

6 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

7 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

7 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

10 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

11 hours ago