தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாக தொடங்கியிருக்கிறதோ? – டிடிவி தினகரன்

Default Image

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாக தொடங்கியிருக்கிறதோ? என டிடிவி தினகரன் ட்வீட்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்  திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் அவர் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலில்ன் அவர்கள், உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு தொகை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து யுடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருச்சி நவல்பட்டு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

ரோந்து பணிக்கு சென்ற திரு.பூமிநாதன், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் எதுவும் கையில் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் கிடந்து போராடி உயிர்விட்டதாக வரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.

சமூக விரோத சக்திகளால் காவல்துறை அதிகாரிகள் இப்படி கொல்லப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாக தொடங்கியிருக்கிறதோ? காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது’  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்