அன்பையும், அறிவையும் தந்து பலனை எதிர்பாரா ஆசிரியப் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்-அமைச்சர் விஜயபாஸ்கர்.!

Default Image

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை சுகாதாரத்  துறை அமைச்சரான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான இன்று பலர் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் அவர்களும் தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, நான்கு சுவர்களுக்குள் தானிருந்து அள்ளக் குறையா அறிவையும் அன்பையும் தந்து பலன் எதிர்பாரா ஆசிரியப் பெருமக்களை நினைவில் நிறுத்தி நன்றியுடன் வாழ்த்துகிறேன். இறைவனுக்கும் முந்திய இடத்தில் இருத்தி வணங்கப்படும் ஆசிரிய பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்