முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று செவிலியர் தினம் கொண்டாடப்படுகிற நிலையில், பலரும் செவிலியர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ‘அன்பு, தியாகம், பொறுமை, சேவையின் திருஉருவமாக பிணிகளின் பிடியிலிருந்து உலகை காத்துக் கொண்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான உலக செவிலியர் தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவிற்கு எதிரான அறப்போரில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து கண்துஞ்சாது அர்ப்பணிப்போடு போராடிக் கொண்டிருக்கும் தாயுள்ளங்களாம் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுவோம்.
உலக மக்களின் உயிர்காக்க போராடும் செவிலியர்களின் சேவைகளுக்கு இவ்வுலகில் ஈடேதுமில்லை. செவிலியர்களின் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்கி, அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நலமுடன் வாழ மனதார வாழ்த்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…