ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 28.8.2021 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது,ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த / கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற முப்பத்தி எட்டாயிரம் பெண்களுக்கு எழுபத்தி ஐந்து கோடியே அறுபத்தி மூன்று இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு பயனாளி ஒருவருக்கு தலா ஐந்து செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்கப்படும் என்று மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனித்தா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இந்நிலையில்,ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் 100% மானியத்தில் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி,செம்மறி ஆடுகள்,வெள்ளாடுகள் வழங்கும் இந்த திட்டத்திற்காக ரூ.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…