சொந்த ஊரில் எச்.வசந்தகுமாரின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.!

Default Image

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர், வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை  தெரிவித்தனர். பின்னர், வசந்தகுமார் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு ஆம்புலன்சில் மூலம் சென்னை தி.நகர் நடராஜன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்கு நேற்று காலை வைக்கப்பட்டது.

பின்னர், மறைந்த வசந்தகுமாரின் உடல்  சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு நேற்று பிற்பகல் புறப்பட்டது. இந்நிலையில், எச்.வசந்தகுமாரின் உடல் தற்போது அவரின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்