மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய எச்.ராஜா !

Default Image

மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய எச்.ராஜா !

இந்தியாவில் கொரோனாவால் 39,980 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10,633 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என அயராது உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில், பாஜக தேசிய செயலர் எச். ராஜா ” சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பாதிப்பு பத்து லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியால் கொரோனா வைரஸை தடுக்க முடிந்தது” என்று கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்