கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் தமிழ் நாட்டில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பதவியேற்றவுடன் முதலில் 500 கடைகளை அடைக்க உத்தரவிட்டார். அதன் பின் அவருக்கு பின் ஓபிஎஸ்- இபிஎஸ் என முதல்வராக பதவியேற்றனர். அதன் பின் மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேர்தலில் மதுவிலக்கு வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தற்போது இதுகுறித்து எந்த முடிவும் எடுத்ததைபோல் தெரியவில்லை.
மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றி மதுவை முற்றிலும் ஒழித்து தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் என பலதரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், பூரண மதுவிலக்கு என்ற முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஆசையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறினார். மது இல்லை என்பதால் யாரும் இறக்காததால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூரண மதுவிலக்கு அமல்படுத்தலாம் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…
சென்னை : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கடந்த 2018 பிப்ரவரி மாதம் 21இல் ஆரம்பித்தார்.…