குட்கா அரசின் ஆட்டம் முடியும்.! மு.க ஸ்டாலின் ட்வீட்..!

Default Image

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், குட்கா விற்பனையைச் சுட்டிக்காட்ட பொட்டலங்களை சட்டசபையிலேயே காண்பித்தோம். கமிஷன் வாங்குகிறவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்; தடை போட்டது உயர்நீதிமன்றம். 2வது நோட்டீசும் இன்று ரத்து! இந்த வேகத்தை குட்கா தடுப்பில் அரசு காட்டியிருக்கலாமே?! குட்கா அரசின் ஆட்டம் முடியும் என பதிவிட்டுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகள் சந்தையில் கிடைப்பதாக கூறி அதை அரசு கவனத்திற்கு எடுத்துக்காட்ட கடந்த 2017-ம் ஆண்டு பேரவையில் திமுக உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகளை கொண்டு சென்றனர்.

இதனால், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் மீது சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ” குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் “ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

முதலில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தவறுகளை நிறுத்தி புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் மீண்டும் 2-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மீண்டும்  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணாபேரவை உரிமை குழுவின் 2-வது நோட்டீஸிக்கு இடைக்காலத்தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rain update in TN
BAN VS NZ
Shankar - dragon
Madras High court - Isha Yoga centre
india vs pakistan - shreyas iyer
Jayalalithaa Birthday - Rajinikanth