முயல்வேட்டைக்கு சென்ற போது தவறுதலாக வெடித்த நாட்டு துப்பாக்கி! ஒருவர் உயிரிழப்பு!

Default Image

முயல்வேட்டைக்கு சென்ற போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு. 

இன்று வேட்டைக்கு செல்லும் பலரும், நாட்டு துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர்.  துப்பாக்கியை நாம் பயன்படுத்த தெரியாமல், பயன்படுத்தினால் அதனால் நமக்கே ஆபத்து நேரிட கூடும். 

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, முயல்வேட்டைக்காக மூன்று சென்றுள்ளனர். வேட்டைக்கு சென்றவர்கள் நாட்டு துப்பாக்கியையும் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சக்திவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, துப்பாக்கி வெடித்து உயிரிழந்த சக்திவேல் உடன் சென்ற செந்தில்குமார் மற்றும் சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்