குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவரது மகன் நரசிம்மன் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், நரசிம்மன் இருளர் சாதி சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதனையடுத்து, குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் நேற்று மாணவன் நரசிம்மனை அழைத்து, விசாரணை செய்து சாதி சான்றிதழ் வழங்கினார். அப்போது, ஷேக் மன்சூர் மாணவனிடம், நீ படித்து என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறாய்? என கேட்டார்.
அதற்கு பதிலளித்த நரசிம்மன், நான் ஐஏஎஸ் படித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறினான். இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட அவர்,மாணவன் நரசிம்மனை தனது இருக்கையில் அமர வைத்து சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…