குரூப் 4 தேர்வு முறைகேடு – முக்கிய நபர் கைது

Published by
Venu
  • குரூப் 4 தேர்வில் 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து ,வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என  டிஎன்பிஎஸ்சி தடை விதித்தது.
  • குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்விற்கான தரவரிசை பட்டியலை கடந்த  நவம்பர் 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என தெரியவந்தது.இதைத் தொடர்ந்து மற்ற தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தியது. தேர்வாணையம் நடத்திய விசாரணையில் 99 பேருக்கு இடைத்தரகர்களின் பெயரிலே கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு செய்ததாகவும் ,  இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையிலான பேனாவினால் விடைகளை எழுதி வந்ததும் தெரியவந்தது.

எனவே சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து ,வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என  டிஎன்பிஎஸ்சி தடை விதித்தது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார்  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது கூட்டுசதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிபிசிஐடி போலீசார் மூன்று தனிப்படை அமைத்து 2 வட்டாட்சியர்கள் , டிஎன்பிஎஸ்சி  அதிகாரிகள் என உட்பட 12 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.டிபிஐயில் ஆவண கிளர்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.விடைத் தாள்களை வேனில் கொண்டு செல்லும் வழியில்  சாப்பிடுவதற்காக வேன் நிறுத்தப்பட்டபோது ,அதை மாற்றி முறைகேட்டிற்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எழும்பூரில் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து இவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago