சமூக நல்லிணக்கத்தின் அடையாளமான ஓணம் திருநாளில் மனதார வாழ்த்துகிறேன் – முக ஸ்டாலின்

Default Image

சமூக நல்லிணக்கத்தின் அடையாளமான ஓணம் திருநாளில் மனதார வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகை இந்த வருடம் இன்று கொண்டப்படுகிறது. ஓணம் பண்டிகையை யொட்டி கேரள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், சமூக நல்லிணக்கத்தின் அடையாளமான ஓணம் திருநாளில் மனதார வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மலையாள மக்கள் அனைவருக்கும் தி.மு.கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் என்றும் தமிழகம் மற்றும் கேரளம் வாழ் மலையாள மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் அடையாளமான ஓணம் திருநாளில் மனதார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்