தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கணேசன்-பிரியதர்ஷினி என்ற தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாய்ப்பால் கொடுக்காமல், ஊசி மூலமாக குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக கையில் குழந்தைக்கு பிளாஸ்டர் போடப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை சரியானவுடன் டிஸ்சார்ஜ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தையின் கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டர் எடுக்க செவிலியர் கத்தரிக்கோலால் வெட்டும் போது தவறுதலாக குழந்தையின் கட்டைவிரலை வெட்டியதாக கூறப்படுகிறது. குழந்தையின் கட்டைவிரலின் பெரும்பகுதி இல்லாததால், பெற்றோர்கள் கதறி அழுதனர்.
பின்பு குழந்தையின் விரலை சேர்த்து தையல் போட்டுள்ளனர். ஆனால் குழந்தையின் விரல் ஒன்று சேருமா என்பது குறித்து இரண்டு நாட்களுக்கு பின்புதான் தெரியும் என்று கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…