நாளைக்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு என அனைத்தும் நிறைவடைத்துவிடும் என ஐ.ஜே.கே., ச.ம.க. கூட்டாக பேட்டி.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது கூட்டணியில் தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதன்பின், ஐ.ஜே.கே துணை பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து, ச.ம.க. தலைவர் சரத்குமார் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினர். அப்போது, எங்கள் கருத்தினை பரிமாறிக் கொண்டியிருக்கிறோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டியிருக்கிறோம். எதற்கும் ஒரு தொடக்கம் தேவை, இந்த தொடக்கம் சிறப்பான தொடக்கமாக அமையும் என்று ரவி பச்சமுத்து கூறினார்.
இவரைத்தொடர்ந்து பேசிய சரத்குமார், சிறந்த கூட்டணியை அமைப்பதற்கும், இந்த தேர்தலை சந்தித்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பயணித்து கொண்டியிருக்கிறோம். மாற்றம் தரும் கூட்டணி அமைந்துள்ளது. நாளைக்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு என அனைத்தும் நிறைவடைத்துவிடும் என்ற நம்பிக்கை எல்லாரிடமும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…