நெல்லை இருட்டுக்கடை பொறுப்பை கையிலெடுத்த பேரன்! 20 நாட்களுக்கு பின் கடை திறப்பு!

Default Image

நெல்லை இருட்டுக்கடை பொறுப்பை கையிலெடுத்த பேரன்.

தமிழகத்தின் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான, ஹரிசிங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இவர் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கு பின், இருட்டுக்கடை 20 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. இக்கடையை நான்காம் தலைமுறை வாரிசான சூரத்சிங் திறந்து, வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தாத்தா ஹரிசிங் கடையில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வாடிக்கையாளர்களிடம் புன்முறுவலோடு தான் பழகுவார். நானும் அதனையே கடைபிடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்