திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக் கூடிய இயக்கம் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விடும் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பழனிசாமி ஏன் செல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். உறவினருக்கு டெண்டர் கொடுத்ததற்கு முகாந்திரம் உள்ளதாக நீதிமன்றம் கூறியது என்றும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக் கூடிய இயக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த இடத்திற்கு தான் படிப்படியாக வளர்ந்து வந்தவன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து ஊர்ந்து வளர்ந்தவர் எனவும் விமர்ச்சித்துள்ளார்.
இதையடுத்து, பத்மநாமபுரம், விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…