ஜி.பி.முத்து, பேபி சூர்யா, சிக்கா மற்றும் திருச்சி சாதனா மீது போலீசில் புகார்…!

Published by
லீனா

ஜி.பி.முத்து, பேபி சூர்யா, சிக்கா மற்றும் திருச்சி சாதனா மீது போலீசில் புகார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் பொழுதுபோக்கும் பூங்காவாக தான் இணைய தளம் உள்ளது .

அந்த வகையில், ட்வீட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் பல செயலிகள் மூலமாக இணையத்தில் பல கச்சாரத்தை சீரழிக்கும் வண்ணம் பல வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட வீடியோக்கள் இன்றைய இளைய தலைமுறையினரை மிகவும் கவர்ந்து வருகிறது.பலரும் தாங்கள் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக ஆபாச பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கீழக்கரை பகுதியை சேர்ந்த முஹைதீன் இப்ராஹிம் என்பவர் ஜி.பி.முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா போன்றோர் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதாக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் காவல்துறைக்கும் புகார் கொடுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், ‘சமீப காலமாக வலைத்தளங்களில் ஆபாச பேச்சு வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காதலால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி யூடியூப் பேஸ்புக் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாத்திக்கும் நோக்கில் சிலர் 1. ஜி பி முத்து, 2. திருச்சி சாதனா, 3, பேபி சூர்யா, 4, சிக்கா என்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர் .

இதனை இலட்சக்கணக்கானோர் காண்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும், பேச்சுக்களும் தமிழ்: நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும், குறிப்பாக இதை காணும் சிறுவர் சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் வகையில் ஆபாச பதிவுகள் உள்ளது. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும், மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இது போன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

33 minutes ago

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?

கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…

38 minutes ago

மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க விதிமுறைகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

50 minutes ago

பாஜக உருட்டி மிரட்டி அதிமுக கூட கூட்டணி வைத்திருக்கிறது! செல்வப்பெருந்தகை பேச்சு!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…

1 hour ago

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

3 hours ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

4 hours ago